இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் ஐம்பத்தி ஆறாவது படலமாகும்.

செண்பகப் பாண்டியனுக்குப் பின் அவனுடைய வழியில் பதினாறாவது தலைமுறையாக குலேச பாண்டியன் என்பவன் தோன்றினான். அவன் தமிழின் இலக்கண இலக்கியங்களில் கற்றுத் தேர்ந்தவன். அவன் தன்னுடைய தமிழ் புலமையால் இறைவன் கொடுத்த சங்கப்பலகையில் அமரும் பாக்கியத்தைப் பெற்றான். குலேச பாண்டியனின் தமிழ் புலமையை கபிலரின் நண்பரான இடைக்காடன் அறிந்து தமிழ் பிரபந்தம் ஒன்றை இயற்றி குலேச பாண்டியனைக் காண விரைந்தார். குலேச பாண்டியனைச் சந்தித்து தாம் இயற்றிய பிரபந்தத்தை இடைக்காடன் பாடிக் காட்டினார். குலேச பாண்டியன் அப்பாடலின் சிறந்த பொருளையும் சொல் திறனையும் உணர்ந்தான். இருப்பினும் தன்னுடைய மனத்தில் உண்டான பொறாமைக் குணத்தால் இடைக்காடனின் பாடலுக்கு தலை அசைக்காமலும் முகத்தில் எந்தவித அசைவுகளை காண்பிக்காமலும் அவரை இகழ்ந்து பேசி அவருக்கு பரிசு ஒன்றும் கொடுக்காமல் அனுப்பி விட்டான். பாண்டியனின் செயலைக் கண்ட இடைக்காடன் வருத்தம் கொண்டு சொக்கநாதரை வழிபட திருக்கோவிலை அடைந்து அப்பனே தமிழை நன்கறிந்த குலேசபாண்டியன் நான் இயற்றிய பிரபந்தத்தை பாடும்போது அதனைக் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் எந்தவித அசைவின்றி இருந்து இகழ்ந்து பேசி விட்டான். பாண்டியனின் இச்செயல் தமிழின் சொல்லாகவும் பொருளாகவும் விளங்கும் உன்னையும் மீனாட்சி அம்மனையும் அவமதிப்பதாக உள்ளது. பாண்டியனின் பாடலை பிழை உள்ளதாக்கி அவனுக்கு சங்கப்பலகையில் இடம் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்று முறையிட்டுவிட்டு கோபத்துடன் வடக்கு நோக்கிச் சென்றார்.

சொக்கநாதர் இடைகாடனின் முறையீட்டினைக் கேட்டு பாண்டியனின் பொறாமை குணத்தை போக்க எண்ணினார். எனவே திருஆலவாய் கோவிலிலிருந்து தன்னுடைய லிங்க உருவத்தை மறைத்து திருஆலவாய் கோவிலுக்கு வடக்கே வைகை ஆற்றிற்கு தென்புறத்தில் அங்கையற்கண் அம்மையுடன் எழுந்தருளினார். சங்கப் புலவர்களும் சொக்கநாதரின் இருப்பிடத்தை அடைத்து அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில் கோவிலில் இறைவனையும் இறைவியையும் காணாமல் அனைவரும் திகைத்தனர். குலேச பாண்டியனிடம் இறைவன் திருக்கோவிலில் இல்லாத செய்தியை எடுத்துரைத்தனர். இறைவனைக் காணாத செய்தியைக் கேட்ட குலேசபாண்டியன் அதிர்ச்சியுற்றான். திருக்கோவிலை அடைந்து செய்வதறியாது திகைத்தான். அப்போது சிலர் பாண்டியனிடம் ஓடி வந்து அரசே வைகை ஆற்றங்கரையின் தென்கரையில் சொக்கநாதர் மீனாட்சி அம்மனுடன் எழுந்தருளி கோவில் கொண்டிருக்கிறார். இதனை அறிந்த சங்கப்புலவர்களும் அங்கே சென்று விட்டார்கள் என்றார்கள். அதனைக் கேட்டதும் குலேசபாண்டியன் விரைந்து சொக்கநாதர் எழுந்தருளிய இடத்திற்கு விரைந்தான். அங்கு இறைவனைக் கண்டு வழிபட்டு ஐயனே தாங்கள் இங்கு எழுந்தருளிருக்கும் காரணம் யாது? அடியேனுடைய தவறு ஏதும் உண்டா? அடியேன் நிகழ்ந்தது அறியேன் என்று விண்ணப்பம் செய்து அழுது புலம்பி வேண்டி எமது தவறைச் சுட்டிக் காட்டி என்னை தடுத்தாட் கொள்ளாவிட்டால் இங்கேயே உயிர் துறப்பேன் என வாளை உருவினான்.

சொக்கநாதர் வாளைத் தடுத்து பாண்டியா என் அன்பனான இடைக்காடருக்கு நீ செய்த அவமானம் தமிழுக்கு செய்ததாகும். தமிழுக்கு செய்த அவமானம் எனக்குச் செய்ததேயாகும். இடைக்காடனின் பாடல்களை நீ அவமதித்ததால் யாம் இங்கு எழுந்தருளியுள்ளோம். நான் எங்குமிருப்பவன். உன் கண்ணிலிருந்து லிங்கம் மறைந்ததே தவிர அதே இடத்தில் தான் நானிருக்கிறேன். இம்மதுரை நகரில் ஏராளமான சுயம்பு லிங்கங்கள் புதைந்திருக்கின்றன. அவற்றை தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் ராட்சதர்களும் மனிதர்களும் வழிபட்டு நற்கதி அடைந்துள்ளனர். இவற்றில் 64 லிங்கங்கள் சிறந்தவை. அவற்றில் அட்டத்திக் பாலகர்கள் வழிபட்ட லிங்கங்கள் மேலானவை. வடகிழக்கு திசையின் அதிபதியான குபேரன் வழிபட்ட இந்த லிங்கத்துள் தற்போது எழுந்தருளியுள்ளேன். இன்று முதல் இது வடத்திருஆலவாய் என்று அழைக்கப்படும் என்று திருவாக்கு மலர்ந்தருளினார். உடனே குலேசபாண்டியன் ஐயனே என்னுடைய பிழையைப் பொறுத்தருளங்கள் எனது தவறை திருத்திக் கொள்கிறேன் என்று மனமுருகி வேண்டினான். இறைவனாரும் மனமிறங்கி மீனாட்சி அம்மனுடன் திருக்கோவிலில் எழுந்தருளினார். குலேசபாண்டியன் இடைக்காடனை அழைத்து வந்து பல உபசரணைகளும் மரியாதைகளும் செய்து அவரிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டு சிறப்புகள் பல செய்து அவருடைய பாடலை முறைப்படி கேட்டு மகிழ்ந்தான். இடைக்காடனும் அரசனை மன்னித்து ஆசி வழங்கினார். இறைவன் இடைக்காருக்காக கோயில் கொண்ட இடமே வட ஆலவாய். மன்னனும் அது முதல் அகந்தை ஒழித்து புலவர்களுக்கான தக்க மரியாதைகளை செய்து அரசாண்டான். சொக்கநாதரின் அருளால் அவனுக்கு அரிமர்த்தனன் என்ற புதல்வன் பிறந்தான். அவனுக்கு முடிசூடிவிட்டு சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

கல்வி கற்றவர்களையும் அறிவுடையோர்களையும் தகுதியுடையோர்களை இகழ்ந்தால் இறைவனின் அருள் கிடைக்காது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

Idaikadan Pinakku Theertha Padalam (இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்)

"Idaikadan Pinakku Theertha Padalam" is a highly celebrated chapter in the Thiruvilaiyadal Puranam that beautifully intertwines divine devotion with the love for the Tamil language.

 

This chapter translates to "The Chapter where Idaikadar's Grievance was Resolved." It is a powerful story demonstrating that Lord Shiva considers an insult to a true poet—and an insult to the Tamil language—as a direct insult to Himself.

 

The Story

1. The Poet's Hope

During the reign of King Kuchela Pandiyan, Madurai was renowned for its literary excellence, and the King himself was a highly educated and proud scholar of Tamil. A gifted poet named Idaikadar, who was a close friend of the legendary Sangam poet Kapilar, composed a brilliant garland of Tamil verses in praise of Lord Shiva. Hoping to be recognized, he brought his poetic masterpiece to the royal court to recite it before the King.

 

2. The Royal Arrogance

Idaikadar poured his heart and soul into reciting his exquisite poetry in the royal assembly. However, King Kuchela Pandiyan was blinded by arrogance regarding his own literary prowess. To assert his superiority, the King deliberately ignored the poet. He did not nod his head, did not offer a single word of praise, and treated Idaikadar's masterpiece with absolute silent contempt.

 

3. The Poet's Anguish

Deeply humiliated and heartbroken, Idaikadar left the palace. He went straight to the Madurai Meenakshi Sundareswarar Temple and stood before the sanctum. With tears in his eyes, he poured out his grievance (Pinakku) to Lord Shiva. He cried, "Oh Lord, the arrogant King did not insult me. By disrespecting my verses, he has insulted the divine Tamil language, and since You are the embodiment of Tamil and the presiding deity of the Tamil Sangam, he has insulted You directly!" After his emotional plea, Idaikadar walked out of Madurai in protest.

 

4. The Divine Boycott

To soothe the wounded heart of His devotee and teach the arrogant King a lesson, Lord Shiva decided to take drastic action. That very night, Lord Sundareswarar and Goddess Meenakshi completely abandoned their ancient, sacred shrine in Madurai. The Lingam literally vanished.

 

The divine couple moved to a temple south of the Vaigai river (and later to the north), magically creating a replica temple overnight known as Vada Thirualavai (North Madurai).

 

5. The King's Panic and Realization

The next morning, the temple priests opened the main sanctum in Madurai and were horrified to find it completely empty. The news reached King Kuchela Pandiyan, who was terrified. He realized this cosmic anomaly was a result of his own grave sin.

 

The King and his ministers desperately searched the kingdom and finally found the divine couple residing in the new Vada Thirualavai temple. The King fell prostrate before the Lord, weeping and begging to know what terrible crime he had committed to make the Lord abandon His eternal city.

 

6. The Resolution

A divine voice boomed from the heavens: "We did not leave because of any fault in the city or the temple. We left because you insulted the great poet Idaikadar, whose heart is filled with pure devotion and faultless Tamil. To show Our solidarity with him, We relocated."

 

Realizing his massive ego had caused this disaster, the King immediately sought out Idaikadar. He brought the poet back to the palace with full royal honors, seated him on a grand throne, showered him with wealth, and publicly begged for his forgiveness while praising his poetry.

 

Satisfied that His devotee's honor was fully restored, Lord Shiva and Goddess Meenakshi joyfully returned to their original sanctum in the main Madurai temple.

 

Significance and Legacy

  • God as the Guardian of Tamil: This chapter is fiercely loved by Tamil scholars because it establishes Lord Shiva not just as a deity, but as the ultimate patron, protector, and embodiment of the Tamil language (Tamil Kadavul).

  • Devotion vs. Ego: The story serves as a timeless warning to rulers and scholars alike: intellectual arrogance and political power mean nothing before the divine, especially when they are used to belittle a true devotee.

  • Vada Thirualavai Temple: The temple to which Lord Shiva temporarily relocated is recognized today as the Mukteeswarar Temple (also known as Vada Thirualavai) near the Vandiyur Mariamman Teppakulam in Madurai. It stands as a physical, historical marker of this specific Thiruvilaiyadal.

Reader Comments

No comments yet. Be the first to share your thoughts!